ஜெயலலிதா மரணம்..! துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை விசாரிக்க வேண்டும் …!மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட  ரெடி..!சசிகலா தரப்பு அதிரடி

Default Image

ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை விசாரிக்க வேண்டும்  என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர்  ராஜா செந்தூர்பாண்டியன்  தெரிவித்துள்ளார்.

Image result for ops jayalalitha

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Image result for ops jayalalitha

இந்நிலையில் விசாரணை  தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர்  ராஜா செந்தூர்பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்க்கும்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அப்பலோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதா ஆடியோவை, மருத்துவர் அர்ச்சனா சுட்டிக்காட்டி உறுதி செய்தார்.ஜெயலலிதா மரணம் தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆணையம் விசாரிக்கும் என நம்புகிறேன்.மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட நாங்கள் தயாராகதான் இருக்கிறோம், ஆனால் ஆணையம் தடை போட்டுள்ளது.மேலும்  இதுவரை விசாரிக்கப்பட்ட ஒருவரிடம் கூட சசிகலாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்றும்  சசிகலா தரப்பு வழக்கறிஞர்  ராஜா செந்தூர்பாண்டியன்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்