ஆசிய கோப்பை 2018:இந்திய அணி அபார வெற்றி ..! விராட் கோலி பாராட்டு..!

Default Image

நேற்று பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது.

இந்நிலையில் இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் அடித்துள்ளது.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மாலிக் 78 ரன்கள்,சர்ப்ராஸ் 44 ரன்கள் அடித்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா ,சாகல் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.இதன் பின்னர் 238 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி 39.3 ஒவர்களிள் ஒரு விக்கெட்டை இழந்து 238 வெற்றி இலக்கை எட்டியது.இதனால் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது..களத்தில் ரோகித் 111 ரன்கள்,ராயுடு 12 ரன்களுடன் இருந்தனர்.அதேபோல் தவான் 114 ரன்களில் ரன்-அவுட் ஆனார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.அவர்  கூறுகையில்,அனைவரும் சிறப்பாக  விளையாடினீர்கள்.போட்டியை நான் ரசித்து பார்த்தேன்.சரியான வெற்றி என்று  விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்