‘ஸ்டெர்லைட் வேண்டாம்’ “வேண்டவே வேண்டாம்” 95 % மக்கள் கருத்து..!!

95 சதவிதம் மக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று கருத்து தெரிவித்ததாக வைகோ கூறினார்.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

Image result for ஸ்டெர்லைட் வேண்டாம்

இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.
 Image result for தேசிய பசுமை தீர்ப்பாய
author avatar
Dinasuvadu desk

Leave a Comment