ரூபாய் 18,00,000 சரக்கு பாட்டில்கள்: கவிழ்ந்த லாரி
தஞ்சை மாவட்டம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தன.
சென்னையில் இருந்து தஞ்சைமாவட்டம் நோக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு மதுபானங்களை ஏற்றிய லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது தஞ்சை நோக்கி வந்து கொண்டு இருந்த பொது தண்டாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் லாரியில் பின் புறத்திலோ இருந்த ஏராளமான மதுப்பாட்டில்கள் சாலையில் சிதறி உடைந்தன. இதனைக் கண்டதும் அருகிலிருந்தோர் உடையாமல் கிடந்த மதுபாட்டில்களை குடிப்பதற்கு எடுத்துச் சென்றனர். தகவலறிந்து அங்கே வந்த போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் .இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.போலீசார் விபத்துக் குறித்து விசாரித்து வருகின்றனர்.
DINASUVADU