இலங்கை ரசிகர்களுக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை..!!
இலங்கை அணியை சிக்கலில் இருந்து ரசிகர்களாகிய நாம் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை அணி, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் படுதோல்வியடைந்தது.இதனைத் தொடர்ந்து இலங்கை அணி வீரர்கள் மீது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திரவீரருமான மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் ,“இலங்கை அணி ரசிகர்களின் ஏமாற்றத்தை நான் புரிந்துகொள்கின்றேன். அந்த ஏமாற்றமடைந்த ரசிகர்களுள் நானும் ஒருவன்.சமூகவலைத்தளங்களில் இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிராக வெளிவரும் பல விமர்சனங்களை காணக்கூடியதாகவுள்ளது.
உண்மையில் வீரர்கள் வெறுக்கத்தக்கவிதமாகவே விளையாடினார்கள். ஆனாலும் இது விளையாட்டு என்பதால் அவர்கள் மீது தனிப்பட்ட விமர்சனங்களை வைக்க முடியாது. இலங்கை அணியை இவ்வாறான சிக்கலில் இருந்து நாம் முன்நோக்கி கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய்ந்து வீரர்கள் வெற்றிக்காக கடினமாக உழைக்க ஊக்கப்படுத்த வேண்டும்.” என உற்சாக படுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார்.
அவரின் ட்வீட்..
DINASUVADU