”அப்பா.. இசை வந்து இருக்கேன்” தந்தை குமரி அனந்தனின் உடலை பார்த்து கதறி அழுத தமிழிசை.!

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தந்தையுமான குமரி அனந்தன் உடலை கண்டு கதறி அழுத பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

KumariAnandan - TamilisaiSoundararajan

சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு உயிர் பிரிந்தது. குமரி அனந்தன் தமிழ் இலக்கியத்திலும் தனி முத்திரை பதித்தவர். பாராளுமன்றத்தில் தமிழில் பேசும் உரிமையை பெற்றுத் தந்தவர் என்ற பெருமை இவரைச் சேரும்.

தற்போது, குமரி அனந்தனின் மறைவு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், அவரது மகளான தமிழிசை சவுந்தரராஜன் தனது சமூக வலைதளத்தில், ”வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர் குமரி அனந்தன், நீங்கள் மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என நினைத்தீர்களோ அதை நாங்கள் செய்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை சாலை கிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரது உடலை வாங்க சென்ற போது தமிழிசை, அப்பாவின் பார்த்து கதறி அழுதார். ”அப்பா.. இசை வந்து இருக்கேன்… இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும் மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா” என்று அழுதபடியே பேசினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் வேறு இயக்கத்தில் பயணித்தாலும், நன்றாக இருக்க வேண்டும் என வாழ்த்தியவர் எனது தந்தை தமிழக மக்களுக்கு எனது தந்தை செய்ய நினைத்ததை, நாங்கள் செய்து முடிப்போம். அவர் மறைந்து விட்டார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை சமீபத்தில் தான் அவரது பிறந்த நாளையும் கொண்டாடி இருந்தோம். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும்” என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet
Jitesh Sharma