விடியல் பயண திட்டம் முதல் மாணவியர் விடுதிகள் வரை! மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்?

மகளிர் முன்னேற்றத்திற்காண சிறப்பு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிடு செய்து இருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

TNBudget2025

சென்னை : 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று காலை 9.30 அளவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

தற்போது, கிராமப்புற மகளிருக்கு தனிப்பட்ட வேலைவாய்ப்பு திட்டங்கள், பொதுவிடங்களில் பாதுகாப்பு மேம்படுத்தல் என மகளிர் முன்னேற்றத்திற்காண சிறப்பு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிடு செய்திருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

விடியல் பயண திட்டம்

அதன்படி, தமிழக முதல்வர் பதவியேற்ற உடனேயே விடியல் பயணம் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டது. விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது. இதற்காக ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழு

சுய உதவிக்குழுக்களில் இதுவரை இணைந்திடாதவர்களை இணைக்கும் வகையில் 10,000 சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்படும். அதன்படி, ரூ.37,000 கோடி கடனும் வழங்க இலக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியர் விடுதி & தோழி விடுதி

சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும். ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும். மாவட்டம்தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அறிவிப்பு

மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் உரிமைத் தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறாதவர்களும் பயன்பெறும் வகையில், புதிதாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும். இதன்மூலம் மேலும் பல மகளிர் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்திற்கு தியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்