“தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது” மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்ற ரேவந்த் ரெட்டி.!

தொகுதி மறுசீரமைப்பின் ஆபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார் என்று தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

DMK - Revanth Reddy

டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு பெரும் நோக்கில் திமுக பிரதிநிதிகள் குழு, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன்பட்நாயக், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அமைச்சர் கே.என்.நேரு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் டெல்லியில் சந்தித்து அழைப்பு விடுத்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முதல்வர் ரேவந்த் ரெட்டி.

தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கான அழைப்பை ஏற்று தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை ஏற்க முடியாது. மிக முக்கியமான பிரச்னையை கையில் எடுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகள்.

நடக்கப்போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல, மாறாக தென்னிந்தியாவின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை. பாஜக-தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு எதிராக சதி செய்து வருகிறது. எந்த விலை கொடுத்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பாஜக பழிவாங்கும் அரசியலைச் செய்கிறது.

தொகுதி மறுசீரமைப்பின் ஆபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டும் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடத்தில் அனுமதி பெற்று பங்கேற்பேன்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்