“கைதி சிறை சொகுசு வாழ்க்கை”எதிரொலி 8 காவல் இடமாற்றம்…!!

Default Image

சிறையில் சொகுசு வாழ்க்கை எதிரொலியாக புழல் மத்திய சிறையின் வார்டன் உள்பட 8 காவலர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் புழல் சிறையில் கைதிகள் மெத்தை தலையணை,செல்போன்,டி.விக்கள் என்று சொகுசு விடுதியை போல சிறையில் வசதிகளை அனுபவித்த போட்டோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Image result for SALEM CENTRAL JAIL

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சேலம் புழல் சிறைச்சாலை,கடலூர்,கோவை சிறைச்சாலைகளிலும் காவல்துறை திடீரென சோதனை நடத்தியது.

Related image

இதில் டி.விக்கள்,எஃப்ம்கள்,செல்போங்கள் என்று பல பொருட்களை பறிமுதல் செய்தது.இந்நிலையில் சிறையில் சொகுசு வாழ்க்கை கைதிகளுக்கு உதவியது தொடர்பாக புழல் மத்திய சிறையின் வார்டன் உள்பட 8 காவலர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முதன்மை தலைமை காவலர்கள் – விஜயராஜ், கணேசன்; சிறை வார்டன்கள் – பாவாடை ராயர், ஜபஸ்டின் செல்வகுமார், சிங்காரவேலன், சுப்பிரமணி, செல்வகுமார், பிரதாப் சிங் ஆகியோரை மாற்றம் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்