சிறையில் சொகுசு வசதி …!அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்தை திரும்பப் பெற வேண்டும்…! மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவருடைய கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
சிறையில் வசதிகள் செய்து கொடுத்தால் கொலை, கொள்ளை அதிகரித்து விடும்.எனவே சிறையில் முதல் வகுப்பில் வசதிகள் செய்து கொடுத்து இருப்பதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய அவருடைய கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தேவையான நிலக்கரியை சேமித்து வைக்காதது, நிர்வாகக் கோளாறு ஆகும் .பாதிப்பு வந்தபின்பு நடவடிக்கை எடுப்பது வேதனை அளிக்கிறது என்றும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.