சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி என பல்வேறு அரசியல் தலைவர்களும், பல்வேறு பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக உக்ரைன் அதிபர் லெஜன்ஸ்கியும், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிகழ்ந்த காரசார விவாதத்தை அடுத்து லெஜன்ஸ்கி இந்த நிகழ்வில் பாதியிலேயே வெளியேறியது பெரும் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை பேட்டி :
இன்னும் 8 மாதத்தில் திமுக கூட்டணியில் விரிசல் விழும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி துணையின்றி தனியாக தான் நிற்பார் என அண்ணாமலை பேசியிருப்பார்.
தொடரும் மீட்பு பணிகள்
தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்ட சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
நக்சலைட்டுகள் மீது என்கவுண்டர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கோடைகால பருவமழை :
வடகிழக்கு, தென்கிழக்கு பருவமழை போல கோடைகால பருவமழையானது மார்ச் 1 முதல் கணக்கிடப்படும். அதன்படி இன்று முதல் கோடைகால பருவமழை கணக்கீடு தொடங்கியுள்ளது.
கடினமாக உழைக்க வேண்டும் :
நாட்டை 30 டிரில்லியன் பொருளாதாரமாக உயர்ரத்த இந்தியர்கள் வாரத்தில் 80 மணிநேரமோ, 90 மணிநேரமோ கடினமாக உழைக்க வேண்டும் என நிதி அயோக்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் வாழ்த்து செய்தி :
மாநிலத்தில் சுய ஆட்சி வேண்டும். இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். இங்கு இருக்க கூடிய இருமொழி கொள்கையே தொடர வேண்டும். இதுதான் எனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விஜய் வாழ்த்து :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் தமிழ் கையெழுத்து :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழில் கையொப்பமிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
குளிக்க தடை :
தென்காசி பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியார் திடலில் முதல்வர் :
தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பிரதமர் மோடி வாழ்த்து :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.