டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!

பீகாரின் சிவானில் இன்று காலை 08.02 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

bihar earthquake

பீகார் : தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, பீகார் மாநிலம் சிவான் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சிவான் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.

அதே போல், வடகிழக்கு மாநிலமான சிக்கிமிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. சிக்கிமின் லாச்சுங் பள்ளத்தாக்கில் காலை 8.13 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் க்டர் அளவில் 2.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் அல்லது காயங்கள் குறித்த எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், டெல்லியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பிரதமர் நரேந்திர மோடி அப்பகுதியில் உள்ள மக்களை அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், சாத்தியமான பின்அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்