அடடா…! சைமா விருது விழாவுக்கு இவரு போகலையா…!!!
சைமா என சுருக்கமாக சொல்லப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞருக்கான 7வது சைமா திரைப்பட விருது விழா வருகிற செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் துபாயில் நடைபெற்றது.
அந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளை சேர்ந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், நடிகைகள் குஷ்பூ, ராதிகா, கீர்த்தி சுரேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழில் சிறந்த நடிகருக்கான விருது வேலைக்காரன் படத்துக்காக சிவகார்த்திக்கேயனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
விழாவுக்கு உறுதியாக வருவதாக கூறியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் துபாய்க்கு வரவில்லை. சைமா விருது விழாவுக்கு வருவதாகவு.ம் வாக்கு கொடுத்துவிட்டு சிவகார்த்திக்கேயன் ஏன் போகவில்லை ? சீமராஜா படம் ரிலீஸ் தொடர்பாக நிலவி வந்த பிரச்சனை காரணமாக அப்செட்டாகிவிட்டாராம் சிவகார்திக்க்கேயன். இந்த சூழலில் சைமா விருது விழாவுக்கு போனால் தன்னால் இயல்பாக இருக்க முடியாது என்பதால் துபாய் பயணத்தை கேன்சல் செய்துவிட்டாராம்.