கூடியது நாடாளுமன்றம் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியது என்ன?

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி வருகிறார்.

President Murmu

டெல்லி : நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கான கூட்டத்தொடர் இன்று  தொடங்கியது.  பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் வளர்ச்சி குறித்து சில விஷயங்களை பேசினார். குறிப்பாக, இந்தியாவின் IT மற்றும் Digital India திட்டங்கள் உலகளவில் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன எனவும்,உலகின் வளர்ந்த நாடுகளை இந்தியாவின் UPI பரிவர்த்தனை ஈர்த்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர் ” மத்திய அரசு, Make in India மற்றும் (Atmanirbhar Bharat) ஆத்மநிர்பர் பாரத் திட்டங்களின் கீழ், தொழில்துறையை ஊக்குவித்து வருகிறது. இந்தியா இன்று தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின் முன்னணி நாடாக வளர்ந்து வருகிறது. நமது விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் அனைவரும் இதில் பெரும் பங்காற்றி வருகிறார்கள்.

அதைப்போல, இந்தியாவின் UPI பரிவர்த்தனை முறை இன்று உலக நாடுகளை ஈர்க்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. பல்வேறு நாடுகள், இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை தங்கள் கட்டமைப்புடன் இணைக்க ஆர்வம் காட்டுகின்றன.இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியில், UPI ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கிறேன். இதன் பயன்பாடு சர்வதேச அளவில் விரிவடைய வேண்டும் என்பதே நமது நோக்கம்” எனவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து ” இந்தியாவின் வளர்ச்சி  என்பது எப்போதும் இல்லாத வகையில், மும்மடங்கு வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இது சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் முக்கிய முன்னேற்றங்களை பிரதிபலிக்கிறது.  என் அரசு தேசிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களுக்கு நவீன கல்வி முறையை உருவாக்கி வருகிறது என்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

இத்தகைய கல்வி முறையில் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக மேலாண்மையை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார்கள். புதிய கல்வி முறையில் மொழி கற்றல், சிறந்த ஆக்கபூர்வ பயிற்சிகள், மற்றும் அறிவியல் பரிசோதனைகள் ஆகியவை முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

நமது இந்திய அணிகள் ஒலிம்பிக், பாராலிம்பிக் உள்ளிட்ட அனைத்து உலகளாவிய போட்டிகளிலும் அற்புதமாக செயல்பட்டுள்ளன. இது இந்திய விளையாட்டுகளின் முக்கிய முன்னேற்றம், மற்றும் சமூகத்தின் மகிழ்ச்சியான செயல்பாடுகளின் பிரதிபலிப்பு” எனவும் திரௌபதி முர்மு பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet
Jitesh Sharma