2047-ல் இந்தியா வல்லரசாகும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் – பிரதமர் மோடி பேச்சு!

நமது குடியரசு 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

narendra modi

டெல்லி : 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தின்பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கி வைக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நின்று பிரதமர் மோடி  சில விஷயங்களை பேசியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பது பற்றி பார்ப்போம். அதில் பேசிய பிரதமர் மோடி ” ஏழைகள், நடுத்தர மக்களின் வாழ்வில் செழிப்பை கொண்டு வர மகாலட்சுமியை பிரார்த்திக்கிறேன்.

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அவரை வேண்டிக்கொள்கிறேன்.இந்த நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக இந்தப் பொறுப்பை என்னிடம் வழங்கியுள்ளனர்,”2047-ல் இந்தியா வல்லரசாகும் வகையில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

நாட்டின் வளர்ச்சிக்காக எதிர்ப்பு அரசியலை எதிர்க்கட்சிகள் கைவிட்டு, ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், தொடர்ந்து 8 சதவீதம் வளர்ச்சியுடன் முன்னேறி வருகிறோம்.

நாட்டின் தூண்களாக அனைவருக்குமான திட்டங்கள், முதலீடு, புத்தாக்கம் திகழ்கின்றன. அனைவருக்குமான திட்டங்கள், புத்தாக்கம் முதலீடு அடிப்படையில் பட்ஜெட் அமையும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் ஏராளமான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மக்களின் மேம்பாட்டுக்காக நாள்தோறும் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்” எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet
Jitesh Sharma