பயணிகளின் கவனத்திற்கு… அதிகனமழையால் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து!

விழுப்புரம் மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு எதிரொலி ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Train Cancelled

சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலி காரணமாக கனமழை பெய்ததால் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் பெய்த கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், இன்று (டிசம்பர் 2) சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல இருந்த 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், வந்தே பாரத் ரயில், தேஜஸ் விரைவு ரயில், சோழன் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில், பாண்டிச்சேரி MEMU ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளின் கவனத்திற்கு:-

  • மழை பாதிப்பு காரணமாக இன்று எழும்பூர் – திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
  • விழுப்புரம் – தாம்பரம் செல்லும் ரயில் மற்றும் புதுச்சேரி எழும்பூர் இடையிலான ரயிலும் ரத்து செய்யப்பட்டது.
  • விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையிலான பாலம் துண்டிக்கப்பட்டதை அடுத்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • தஞ்சையில் இருந்து நேற்று எழும்பூர் புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் (16866 ) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிலையங்களில் ரயில் நிற்காது.
  • மன்னார்குடியில் இருந்து நேற்று எழும்பூர் புறப்பட்ட ரயில் (16180), செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிறுத்தங்களில் நிற்காது.
  • காரைக்காலில் இருந்து நேற்றிரவு தாம்பரம் புறப்பட்ட ரயில் (16176) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும், செங்கல்பட்டில் நிற்காது.
  • செங்கோட்டையில் இருந்து நேற்று புறப்பட்ட சிலம்பு அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலும் (20682) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும், செங்கல்பட்டில் நிற்காது.

ரயில் பாலத்தில் வெள்ளநீர் – ரயில்கள் ரத்து

ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்ததால் 5 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் விரைவு ரயில்,

மதுரை – சென்னை வைகை விரைவு ரயில்,

காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில்,

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் விரைவு ரயில்,

சென்னை – மதுரை தேஜாஸ் விரைவு ரயில் ஆகிய 5 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலை ரயில் சேவை ரத்து:

ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் நீலகிரியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. மண்சரிவு அபாயத்தால் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே விளக்கம் கொடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar
goods trains collide in Jharkhand
TNPSC Group 1 Mains Exam
aadhav arjuna - Charles jose martin