இன்றைய மழை அப்டேட் : அதி கனமழை முதல் மிதமான மழை வரையில்…

இன்று பகல் 1 மணி வரையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy rain

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலுக்கு பின்னர் மாமல்லபுரம் – காரைக்கால் கடற்கரை பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

புயல் கனமழை காரணமாக, முன்னதாக 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது பகல் 1 மணி வரையில் தமிழ்நாட்டில் மழை குறித்த அப்டேட்டை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,  சென்னை ,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் எனவும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் என்றும்,

கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் இன்று (30.11.2024) மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Tamilnadu CM MK Stalin
tn rain
Kerala CMO bomb threat
PUDUCHERRY'
16 Youtube channels block
TN CM MK Stalin