புழல் சிறையில் சொகுசு வாழ்கை…!சட்டத்துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…!திமுக பொருளாளர் துரைமுருகன்

Default Image

புழல் சிறையில் சொகுசு வாழ்கை குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார் .

மத்திய புழல் சிறையில் கைதிகள் தனி டிவி , தனி சமையல் அடுப்பு ,தனியான சமையல் உணவு , வசதியான பெட் சீட் , நவீனவிதமான உடைகள் , விலையுயர்ந்த காலணி என ஆடம்பரமான சொகுசு வாழ்கை வாழ்த்துவருகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

விதி மீறல் சென்னை மத்திய புழல் சிறையில் தண்டனை உயர் பாதுகாப்பு கொண்ட சிறைக்கைதிகள் அறையில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கொல்கத்தாவில் இருந்து கள்ள நோட்டு , கள்ள தூப்பாக்கி கடத்தல் குற்றவாளிகள், மத தலைவர்கள் மிரட்டல் , கொலை போன்ற வழக்கில் கைதானவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி இருக்கும் கைதிகள் அறையில் கூட இன்று கைதிகள் செல்போன் பயன்படுத்துகிறார்கள் சர்வசாதாரணமாகிவிட்ட்து.அது மட்டுமில்லாமல் கைதிகள் சிறையிலேயே சில அதிகாரிகளுடன் கூட செலஃபீ எடுத்து பதிவிடுகின்றனர்.இது பற்றி விசாரிக்கும் பொது காய்கறி மூடையில் காய்கறி கொண்டு செல்லும் பொது லஞ்சம் வாங்கிக்கொண்டு சில அதிகாரிகளே இதற்க்கு துணை புரிகிறார்கள் என்று தகவல் வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில்,  புழல் சிறையில் முக்கிய குற்றவாளிகளுக்கு சொகுசு வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் புகார் குறித்து, சட்டத்துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்