10 மணி வரையில் இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! அலெர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்திருந்தது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. மேலும், தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் கனமழையின் தீவிரமும் குறைந்து விடும் என முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனால், இன்று முதல் வரும் நவ-9ம் தேதி வரையில் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை 10 மணி வரையில், தமிழகத்தில் உள்ள 17 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025