தவெக முதல் மாநாடு: பெற்றோரிடம் ஆசி வாங்கிய விஜய்.!

மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் - ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசிபெற்றார்

TVK Vijay Maanaadu
விழுப்புரம் : தவெக மாநாட்டு நிகழ்வுகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தலைவர் விஜய்யை உரையாற்ற மேடைக்கு அழைக்கப்பட்டார்.

ஆனால், நேரே அவர் மைக் முன் செல்லாமல், மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசிபெற்றார். பின் மேடைக்கு திரும்பிய அவர் அதிரடியாக பேசத் தொடங்கியுள்ளார்.

மேடையில் பேச தொடங்கிய விஜய், “பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் நம்முடைய நம்பிக்கை, கவனமாக களமாட வேண்டும்” என்று உரையை பேச தொடங்கிய அவர், சிலர் சிலர் என்று தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை பற்றி பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk maanadu live
TVK VIjay RS Bharathi
TVK Maanaadu
ThalapathyVijay tvk
tvk title
TVK Vijay Speech
tamilaga vettri kazhagam