கொடியை ஏற்றியவுடன் நெகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே கண்கலங்கிய தவெக தலைவர் விஜய்!

த.வெ.க மாநாட்டில் கொடியை ஏற்றியவுடன் நெகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டேதவெக தலைவர் விஜய் கண்கலங்கினார்.

TVK Maanadu Vijay

விழுப்புரம் : த.வெ.கவின் பிரமாண்ட மாநாடு இன்று விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் சரியாக 3 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. மாநாடு தொடங்கியதை தொடர்ந்து சரியாக 4 மணி அளவில் தொண்டர்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் மேடைக்கு வருகை தந்தார். அப்போது, கட்சி பாடல் ஒலிக்கபட்டது.

அதன்பிறகு,  மாநாடு  நடைபெறும் மேடைக்கு  வருகை தந்தார். வந்தவுடன் தனது தொண்டர்களுக்கு கை அசைத்து நலம் விசாரித்தார். நடைபாதையில் கட்சித் தலைவர் விஜய் நடந்து கொண்டிருக்கும் போது மேடை பக்கவாட்டு தடுப்புகளை மீறி பாதுகாவலர் ஒருவர் நடைபாதைக்கு வந்து சல்யூட் செய்தார்.

அவருக்கு விஜய் வணக்கம் செலுத்திவிட்டு தனது ரோம்ப் வாக்கை தொடர்ந்தார். அதன் பிறகு, சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  செலுத்திய பிறகு கம்பத்தில் கொடியேற்றும்போது தொண்டர்கள் தளபதி, தளபதி என்று முழக்கம் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இத்தனை ஆண்டுகள் இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தேன் என்கிற அளவுக்கு கொடியை ஏற்றியவுடன் வந்த ஆனந்தத்தில் சிரித்துக்கொண்டே விஜய் சற்று கண்கலங்கி எமோஷனலை வெளிப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்