த.வெ.க மாநாடு: சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை!

தலைவர்கள் மற்றும் தியாகிகள் படத்திற்கு மலர் தூவி தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

TVKMaanadu vijay

விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரமாண்டமாக இன்று தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட மாநாட்டுக்கு மார் 8 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஒட்டு மொத்த கவனமும் மாநாடு பக்கம் தான் இருந்த நிலையில், கட்சி பாடல் ஒலிக்க தொண்டர்களின் தலைவா…தலைவா என்ற கரகோஷத்துடன் விஜய் மாநாடு  நடைபெறும் மேடைக்கு  வருகை தந்தார்.  வருகை தந்த பிறகு மாநாடு நடைபாதையில் கட்சித் தலைவர் விஜய் நடந்து கொண்டிருக்கும் போது மேடை பக்கவாட்டு தடுப்புகளை மீறி பாதுகாவலர் ஒருவர் நடைபாதைக்கு வந்து சல்யூட் செய்தார்.

அவருக்கு விஜய் வணக்கம் செலுத்திவிட்டு தனது ரோம்ப் வாக்கை தொடர்ந்தார். அதன் பிறகு, சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்