வெயிலின் தாக்கம்..மயங்கும் தொண்டர்கள்! முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு?

திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே தவெக மாநாடு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மணிக்கு தொடங்க இருக்கும் மாநாடு 3 மணிக்கே தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

tvk maandu vijay

விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பிரமாண்டமாகச் செய்யப்பட்டு மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டம் வரும் என்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

இருப்பினும் தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் பலர் வெயிலின் தாக்கம் காரணமாக மயக்கமடைந்து வருகிறார்கள். மயக்கம் அடைந்த அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அறிவிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக 4 மணிக்குத் தொடங்கும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது நேரம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கு, முக்கியமான காரணமே மக்கள் கூடிய கூட்டம் தான். அதிக அளவில் தொண்டர்கள் மாநாட்டில் கூடியுள்ள காரணத்தால் மாநாடு பிற்பகல் 3 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதைப்போல, மாநாட்டை இரவு 9 மணிக்கு மாநாட்டை முடிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், 8 மணிக்கே நிறைவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். தற்போதே லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கும் நிலையில், முன்கூட்டியே மாநாடு தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்