“மாநாட்டுக்கு அப்படித்தான் வர வேண்டும்.!” மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் விஜய்.!

தவெக மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என அக்கட்சித் தலைவர் விஜய் சமூக வலைதளம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

TVK Vijay

சென்னை : தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான வேளைகளில் கட்சி நிர்வாகிகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய் மாநாடு குறித்த பல்வேறு அறிவுரைகளை தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் வழங்கி வருகின்றார்.

அதேபோல தற்போதும் மாநாடு குறித்த வழிகாட்டு அறிவுரைகளை வழங்கியுள்ளார் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக பதிவிடுகையில், ” பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். எல்லா வகைகளிலும் நீங்களும், உங்கள் பாதுகாப்புமே எனக்கு முக்கியம்.ஆகவே, மாநாட்டுப் பயணத்தின் போது நீங்கள் மிகவும் பாதுகாப்பாகவும், மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நலல்து. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு,
மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.” என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்