குடை முக்கியம் மக்களே!! அடுத்த 3 மணி நேரத்திற்கு குமரி மற்றும் நெல்லையில் மழை பெய்யும்.!

இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

south side rain

நெல்லை : பருவமழையானது தென்மாவட்டங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது. நேற்றைய தினம் 13 தென் மாவட்டங்களிலும் இன்றைய தினம் 9 மாவட்டங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனிடையே, இன்று காலை 4 மணி வரை மழை கொட்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.

தற்பொழுது, அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் வேளைக்குச் செல்வோர் குடை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்