சிறகடிக்க ஆசை சீரியல் -மீனாவின் பேச்சை மீறி முத்து செய்த காரியம்..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 25]எபிசோடில் முத்துவை குடிக்க வைக்கும் முயற்சியில் ரோகினி..

manoj (10) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 25]எபிசோடில் முத்துவை குடிக்க வைக்கும் முயற்சியில் ரோகினி..

முத்து மீனாவை புகழும் வித்யா ;

பார்ட்டி முடிஞ்சு விஜயாவும்  அண்ணாமலையும் வீட்டுக்கு கிளம்புறாங்க.. இப்போ மீனா நாங்களும் வர்றோம்னுனு   சொல்றாங்க .அதுக்கு அண்ணாமலை சொல்றாரு நீங்க  இருந்தா மனோஜ்க்கு கொஞ்சம் சப்போர்ட்டா இருக்கும் நீங்க இருந்து எல்லாம் முடிச்சிட்டு வாங்க அப்படின்னு சொல்றாரு.. இப்போ மனோஜ் பார்ட்டி ரூமுக்குள்ள போக அங்கே மும்பை பிசினஸ்மேன் மனோஜ குடிக்க கூப்பிடுறாரு .. மனோஜ்  சொல்லுறாரு அந்த பழக்கம் எனக்கு  இல்ல சார்  அப்படின்னு அப்புறம் பார்க் ஃபிரண்ட் மனோஜ் மனச மாத்தி குடிக்க வைச்சுடுறாரு .. இப்போ ரோகினி வித்யா கிட்ட எப்படியாவது முத்துவ குடிக்க வைக்கணும் அப்பதான் நம்ம செல்ல எடுக்க முடியும்.. நீ மீனாவை தனியா கூப்பிட்டு போயி சாப்பிட வையுன்னு சொல்றாங்க.

வித்யாவும் மீனாவ கூப்பிட்டு ஜூஸ் குடிக்க சொல்றாங்க .இப்போ சுருதியும் அங்கே வராங்க இந்த பார்ட்டி எல்லாம் அரேஞ்ச் பண்றதுக்கு எவ்வளவு செலவாக இருக்கும் ஸ்ருதினு  கேட்க.. அதுக்கு ஸ்ருதி சொல்லுறாங்க  எப்படியும் ஒரு அஞ்சு லட்சம் ஆயிருக்கும்னானு  ..மீனா அப்படியே ஷாக்கா  இவ்வளவு பணம் இருந்திருந்தால் நாங்க மாடில ரூமே கட்டியிருப்போம் அப்படின்னு சொல்றாங்க.. இப்போ வித்யா மீனா கிட்ட  நீங்களும் முத்துவும் ரொம்ப ரொமான்டிக்கான கப்புல் உங்கள பார்த்தா எனக்கே பொறாமையா இருக்குன்னு சொல்றாங்க.. அந்தப் பக்கம் முத்து பார்ட்டி ரூம்குள்ள போறாரு.. குடிக்கிற எல்லாரையுமே பாத்துட்டு இருக்காரு .. மனோஜூம் ரவியும்  இன்னைக்கு ஒரு நாள் தானடா நீயும் குடி அப்படின்னு சொல்றாங்க.. இல்ல எனக்கு வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு தனியா சோபால போய் உக்காரு.

muthu, (1)

பொறுமையை இழந்த முத்து ;

இத பாத்துட்டே இருக்க வித்யா என்னடி முத்து  குடிக்க மாட்டார் போலையே தனியா உக்காந்து இருக்கிறார்னு  சொல்ல கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பாரு அவரே தன்னால போய் குடிக்க ஆரம்பிச்சிடுவாரு குடிகாரங்களால ரொம்ப நேரம் இருக்க முடியாது.. அப்டின்னு ரோகிணி சொல்லுறாங்க .. சோபால உக்காந்து இருக்க முத்து கிட்ட மறுபடி மனோஜும் ரவியும் வராங்க ..ரவி சொல்லுறாரு  முத்து இந்த கெட்டப்பு உனக்கு சூப்பரா இருக்குடா.. உடனே மனோஜ் இது நான்  வாங்கி கொடுத்தது தான் சொல்ல முத்துக்கு கோவம் வருது உடனே ரவி சமாதானப்படுத்தி மனோஜ தனியாக கூப்பிட்டு போறாரு..

செல்வத்துக்கு கால் பண்ணி பேசிட்டு இருக்காரு.. அப்புறம் மறுபடியும் மீனாவுக்கு கால் பண்ணி குடிக்க வா மீனான்னு  கேக்குறாரு எல்லாமே ஃபாரின் சரக்கு மீனா பாக்கவே கண்ணை பறிக்குதுன்னு சொல்றாரு  முதல்ல நீங்க வாங்க அப்படின்னு சொல்ல முத்துவும் சரி சரி அப்படின்னு சொல்லிட்டு கொஞ்ச நேரம் பாத்துட்டே இருக்குறாரு.. அப்புறம் இருக்க முடியாம  குடிக்க ஆரம்பிச்சுட்டாரு.. ஃபுல்லா குடிச்சிட்டு மும்பை பிசினஸ் மேன் பக்கத்துல போயி பேச ஆரம்பிக்கிறாரு அதோட இன்னைக்கு எபிசோட முடிச்சிடறாங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்