அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்., 234 தொகுதிகளுக்கும் முக்கிய அப்டேட்.!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கான, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

ஆய்வு

விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. எனவே, மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, மாநாடு நடைபெறுவதற்கு முன்பு முதல் அறிவிப்பாக விஜய் அன்பு கட்டளை ஒன்றை தொண்டர்களுக்கு போட்டு இருந்தார்.

கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும்.அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து அடுத்த நகர்வாக 234 தொகுதிகளுக்கும் முக்கிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக் கொள்கை மாநாட்டிற்கான, சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் பற்றிய விவரத்தை விஜய் அறிவித்து இருக்கிறார்.

இந்தத் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், மாநாட்டிற்கு வரும் கழகத் தோழர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட ரீதியிலான உதவிகளை மேற்கொள்வார்கள்” எனவும் விஜய் அறிக்கையில் அறிவித்து இருக்கிறார்.

மாநாடு தொடங்குவதற்கு முன்பு விஜய் தன்னுடைய அரசியல் வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மாநாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் விவரம் அறிக்கையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்