“விராட்டை கேட்டதா சொல்லுங்க”…பெண் ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஹித் சர்மா!

"நான் விராட் கோலியின் பெரிய ரசிகை அவரை கேட்டதாக சொல்லுங்கள்" என ரசிகை ஒருவர் கூறியதற்கு ரோஹித் சர்மா கூறிய பதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

virat and rohit

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா எப்போதும் தன்னிடம் ரசிகர்கள் புகைப்படம் கேட்டாலும், ஆட்டோகிராஃப் கேட்டாலும் அதனைப் போட்டுக்கொடுக்க தயங்கியது இல்லை. அப்படி தான், சமீபத்தில் பெண் ரசிகை ஒருவர் ஆட்டோகிராஃப் கேட்டதும் போட்டுக்கொடுத்து அவரை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 24-ஆம் தேதி புனவேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக, பயிற்சி எடுப்பதற்காக ரோஹித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் மைதானத்திற்குச் சென்றார்கள். அப்போது ரோஹித் சர்மா செல்வதை அங்கிருந்த பெண் ரசிகை ஒருவர் பார்த்தார்.

பார்த்தவுடன் வேகமாக ரோஹித் பாய்…ரோஹித் பாய்… எனக்கு ஒரு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுங்கள் என கேட்கிறார். ரோஹித் சர்மாவுக்கு தான் சத்தம் போட்டது கேட்டிருக்காது அவர் நமக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுக்கமாட்டார் என அந்த பெண் நினைத்த நிலையில்,  ரோஹித் ஷர்மாவும் அவருடைய சத்தத்தை கேட்டு  ஏற்று வேகமாக அவரிடம் இருந்த பெண் மற்றும் நோட்டை வாங்கி தன்னுடைய ஆட்டோகிராஃப்பை போட்டுக்கொடுத்தார்.

இதனால் அந்த பெண் இன்ப அதிர்ச்சியும் ஆகினார். ரோஹித் ஆட்டோகிராஃப் போட்டவுடன் அந்த ரசிகை ஆனந்தக் கண்ணீரில் நன்றி நன்றி ரோஹித் பாய் என கூறினார். அத்துடன் விராட் கோலியின் தீவிரமான ரசிகை நான். நான் அவரை கேட்டதாக எனக்காக அவரிடம் சொல்வீர்களா? எனக் கேட்கிறார்.

அதற்கு ரோஹித் சர்மாவும் சிரித்துக்கொண்டு “கண்டிப்பாக விராட் கோலியிடம் சொல்கிறேன்” எனக் கூறினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த அந்த பெண் ரசிகை உற்சாகத்துடன் வீட்டிற்கும் சென்றார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்