குட்கா ஊழலில் ரூ.150 கோடி வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறைஅதிகாரிகள்…!பகீர் தகவலை வெளியிட்ட தினகரன் அணி …!

Default Image

அமைச்சர் விஜயபாஸ்கரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன்.

Image result for vijayabaskar palanisamy

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Image result for தங்கத்தமிழ்  செல்வன்

இந்நிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை அதிகாரிகளுக்கு குட்கா ஊழலில் ரூ.150 கோடி வரை கொடுக்கப்பட்டது உண்மை என தெரிய வந்துள்ளது. ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரை இன்னும் அமைச்சர் பதவியில் இருந்து ஏன் நீக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்