கனமழை: பள்ளிபாளையத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.!

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

school leave rain

நாமக்கல் : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளனர். தற்பொழுது, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், பள்ளிபாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று (22-10-2024) மட்டும் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்