“நான் ஏற்கனவே அரசியல்வாதி.. தவெக மாநாட்டுக்கு அழைப்பு வந்தா போவேன்” – நடிகர் விஷால்.!

விக்கிரவாண்டி நடைபெறவிருக்கும் தவெக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் பங்கேற்பேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

vijay - vishal

சென்னை : ஒரு வாக்காளராக நான் ‘தமிழக வெற்றிக் கழக மாநாட்டில்’ கலந்து கொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால், செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக மாநாடு குறித்துபேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ” தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு தன்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் ஒரு வாக்காளர் என்ற முறையில் தவெக மாநாட்டில் பங்கேற்பேன்.

புதிய அரசியல்வாதி வருகிறார். இதனால் விஜய்யின் கொள்கை, மக்களுக்கு அவர் என்ன கூற உள்ளார் என்பதை பார்ப்பதற்காகவே நிச்சயம் செல்ல உள்ளதாகவும், தவெகவில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறினார்.

நான் ஏற்கெனவே அரசியல்வாதிதான், சமூக சேவை செய்கிற அனைவருமே அரசியல்வாதிதான். ஒருவேளை, 2026 தேர்தலில் நான் வேட்பாளராக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், நடிகர் விஷால் விஜய்யை பாலோ செய்து வருவதாகவும், அவருடைய சாயலில் விஷாலின் நடவடிக்கைகள் இருப்பதாகவும், விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்