இன்னும் திருமணம் செய்து கொள்ளாத அனிருத்! காரணம் என்ன தெரியுமா?

அனிருத் எப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்து வைத்திருக்கிறார் என சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

anirudh

சென்னை : தொட்டதெல்லாம் தங்கம் என்ற பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ இசையமைப்பாளர் அனிருத்க்கு நன்றாகவே பொருந்தும் என்றே சொல்லலாம். ஏனென்றால், குறைவான படங்களுக்கு இசையமைத்து தற்போது இந்திய சினிமா திரையுலகில் முக்கிய இசையமைப்பாளராக வளர்ந்து நிற்கிறார்.

அதற்கு முக்கிய காரணமே அவருடைய இசையின் தாக்கம் தான். அந்த அளவிற்கு இளைஞர்களைக் கவர்ந்திருக்கும் வகையில், துள்ளலான இசையைக் கொடுத்துத் தனி ஒரு ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் காதல் விஷயங்கள் பற்றிய பல சர்ச்சைகள் சிக்கினாலும் கூட, இப்போது முழுவதுமாக தன்னுடைய இசையமைக்கும் வேலையில் மட்டுமே முழு கவனத்தைச் செலுத்தி வருகிறார். இதன் காரணமாகத் தான் அவர் திருமணம் செய்து கொள்வதில் கூட கவனத்தைச் செலுத்தாமல் இருக்கிறார் என்று கூடச் சொல்லலாம்.

34 வயதாகியும் அனிருத் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதற்கான காரணம் என்னவென்று அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றாலும் கூட, யோசித்துப் பார்க்கையில் அவருடைய வேலைகள் அந்த அளவிற்கு இருப்பது தான் பெரிய காரணம். அந்த அளவுக்குத் தொடர்ச்சியாகப் பல பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வேலைகளில் அனிருத் பிஸியாக இருக்கிறார்.

இந்த நிலையில் அனிருத் திருமணம் செய்து கொள்ளாத காரணத்தைப் பற்றி நடிகரும், சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். அனிருத்துக்கு திருமணம் ஆகாதது ஏன் என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டதற்குப் பதில் அளித்த அவர் ” இத்தனை வயதாகியும் அனிருத்துக்கு திருமணம் ஆகவில்லை என்றால் அவருக்கு யாரும் பொண்ணு கொடுக்கவில்லை என்பது இல்லை.

அவர் எப்போது திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்து வைத்திருக்கிறார். அவருடைய வேலை பிஸி காரணமாகத் தான் அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்