சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து குடிக்கும் பாலில் தூக்க மாத்திரையை கலந்த ரோகினி..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 16]எபிசோடில் ஸ்ருதி  மீண்டும் வீட்டுக்கு வருகிறார் .. ரோகிணி முத்து குடிக்கும் பாலில் தூக்க மாத்திரையை கலக்கிறார்..

Rohini (7) (1) (1)

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 16]எபிசோடில் ஸ்ருதி  மீண்டும் வீட்டுக்கு வருகிறார் .. ரோகிணி முத்து குடிக்கும் பாலில் தூக்க மாத்திரையை கலக்கிறார்..

அண்ணாமலை ஸ்ருதியை விசாரிக்கிறார் ;

மீனா அண்ணாமலைக்கு சாப்பாடு பரிமாறிட்டு இருக்காங்க நல்லா சாப்பிடுங்க மாமா.. முதல்ல மாதிரி நீங்க சாப்பிடுவதில்லை அப்படின்னு சொல்றாங்க. ரவி ஸ்ருதியோட வீட்டுக்கு வராரு ..அத பாத்த முத்து என்ன பல குரலு  நீயும் வந்துட்டியா அப்படின்னு சந்தோசப்படுறாரு.. இப்ப மனோஜ் சொல்றாரு நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே டெஸ்ட் மேட்ச் மாதிரி சண்டை போட்டுட்டே தானே இருக்கீங்க அப்புறம் ஏன் அங்க போன அப்படின்னு கேக்குறாரு ..விஜயாவும் நான் எவ்வளவோ சொல்லியும் நீ கொஞ்சம் கூட என்ன மதிக்காம கிளம்பி போற அப்படின்னு சொல்லி திட்டுறாங்க .ஸ்ருதி கூலா ஆன்ட்டி இப்ப ஏன் டென்ஷன் ஆகுறீங்க அப்படின்னு கேக்குறாங்க.. எனக்கு உடம்பு சரியில்ல அதை கொஞ்சம் கூட கண்டுக்காம ரவி வேலைக்கு போயிட்டான் அதனால தான் நான் போனேன் அப்படின்னு சொல்றாங்க..

ரோகினியும்  எனக்கும் மனோஜ்க்கும் சின்ன சின்ன சண்டை வரத்தான் செய்யுது அதுக்காக நான் என்ன எங்க அப்பா வீட்டுக்கு போறேன் அப்படின்னு கேக்குறாங்க அதுக்கு உடனே முத்து நீ போனா ஜெயிலுக்கு தான் போகணும் அப்படின்னு சொல்றாரு. கோபப்பட்டு ரோகினி அங்கிள் இவரை பேசாம இருக்க சொல்லுங்க அப்படின்னு சொல்றாங்க. அண்ணாமலை அண்ணாமலை சுருதியை  விசாரிக்கிறாங்க..   உன்ன சந்தோசமா பாத்துக்குவோம்ன்னு உங்க அம்மாவுக்கு வாக்கு கொடுத்திருக்கேன் அப்டினு சொல்லுறாரு .  அங்கிள் இங்க நடந்த எதையுமே நான் வீட்ல சொல்லல இது என்னோட குடும்பம் நான் எப்படி விட்டுக் கொடுப்பேன் அப்படின்னு சொல்லவும் எல்லாருமே சந்தோஷப்படுறாங்க. இப்போ  விஜயா  என்ன புது மோதிரமா இருக்கு உங்க வீட்ல போட்டாங்களா அப்படின்னு கேக்குறாங்க.. இல்ல ஆன்ட்டி இது ரவி வாங்கி கொடுத்தது ரவி சும்மா எனக்கு சாரி சொல்லல ரிங் வாங்கி கொடுத்து சாரி சொல்லி இருக்கிறான் அதனால் தான் வந்தேன் அப்படின்னு சொல்றாரு சொல்றாங்க..

muthu,meena (23) (1)

பாலில் தூக்க மாத்திரையை கலக்கும் ரோகினி ;

இப்போ ரவிய தனியாக கூப்பிட்டு திட்டுறாங்க.. நீயும் என்னை மதிக்காம அவளை போய் கூப்பிட போனியா .இல்லம்மா நான் போவேனம்னு  தான் இருந்தேன் அப்புறம் அண்ணி  தான் எடுத்து சொன்னாங்க அதான் போனேன்  அப்படின்னு சொல்லுறாரு . இப்ப நேரா விஜயா மீனாவ தேடி போறாங்க  மீனா நீயே  வீட்டை ஆளலாம்னு நினைக்கிறியா.. இல்ல அத்தை  அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு தனித்தனியா இருக்க கூடாதுன்னு நினைச்சேன் அதான் ரவி கிட்ட சொன்னேன்னு சொல்றாங்க. இப்போ அண்ணாமலையும் வராரு .. இப்ப ஏன் அவளை திட்டுற புருஷன் பொண்டாட்டிய சேர்த்து தானே வச்சிருக்கா ..மாமியாரா நீ செய்ய வேண்டியது அவ பண்ணி இருக்கா அப்படின்னு மீனாவ பெருமையா பேசுறாரு .. இப்போ மீனா கிச்சன்ல பால் காய்ச்சிட்டு இருக்காங்க அப்ப ரோகினி வராங்க ..

மீனா மாடியில துணி போட்டு இருக்கீங்களா மழை வர மாதிரி இருக்கு அப்படின்னு சொல்லவும் எல்லாமே எடுத்துட்டேன் இருந்தாலும் நான் போய் செக் பண்ணிட்டு வரேன் போறாங்க.அந்த கேப்ல ரோகிணி தூக்க மாத்திரையை கலந்திடுறாங்க.. மீனாவும் முத்துக்கு அந்த பாலை எடுத்துட்டு போய் கொடுக்குறாங்க முத்து அவர் பாதி பால் குடிச்சிட்டு மீனா நீயும் குடி நீயும் கஷ்டப்படுறல்ல அப்படின்னு மீனாவுக்கும் கொடுக்குறாங்க.. ரெண்டு பேருமே குடிச்சிடுறாங்க. இப்ப முத்து மீனாவை பாட்டு பாட சொல்றாரு.   மீனாவும்  பாடுறாங்க. ரோகினி ரூமோட வாசல்ல நின்னு  கழுகு மாதிரி பாத்துட்டு இருக்காங்க எப்படா இவங்க தூங்குவாங்கன்னு .இப்ப முத்துவும்  பாட்டை கேட்டுட்டு தூங்கிடுறாரு.. அதோட இன்னைக்கு  எபிசோட முடுச்சுருக்காங்க ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்