ஓய்வு எடுத்த கனமழை: சென்னை சென்ட்ரலில் இருந்து வழக்கம்போல் ரயில்கள் இயக்கம்.!

சென்னையில் வழித்தடம் மாற்றப்பட்ட 3 ரயில்கள், வழக்கம் போல இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

SouthernRailway

சென்னை:  வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால், மாற்று ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

ஆனால், நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில், வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டது.

இதனால், ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட மற்றும் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், மைசூரு – சென்னை காவேரி ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் ரயில்கள் இயக்கம்

  1. 2160 சென்னை சென்ட்ரல் – மும்பை ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். முன்னதாக சென்னை – அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
  2. 22637 சென்னை சென்ட்ரல் – மங்களூர் சென்ட்ரல் ‘வெஸ்ட்கோஸ்ட்’ ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். முன்னதாக சென்னை – திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
  3. 12695 சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். முன்னதாக சென்னை – ஆவடி இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கிடையில், வியாசர்பாடி – பேசின் பிரிட்ஜ் இடையே மழைநீர் தேங்கியதால் நேற்றைய தினம் சில ரயில்கள், ஆவடி மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்