”ரொம்ப நம்பி ஏமாந்துட்டேன்”….நடிகை ஓவியா வேதனை!

என்னைப் பலர் காதலித்து ஏமாற்றினார்கள். அதுமட்டுமல்லாமல் சிலர் பண விஷயத்திலும் என்னை ஏமாற்றினார்கள் என ஓவியா யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

oviya sad

சென்னை : ஓவியா தனிப்பட்ட வீடியோ என கூறி பகிரப்படும் வீடியோ காரணமாகத் தான் அவருடைய பெயர் கடந்த சில தினங்களாகவே ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. பரவும் இந்த வீடியோக்களுக்கு தன்னுடைய பாணியில் சமூக வலைத்தளங்களில் ஓவியா பதிலடி கொடுத்ததும் வருகிறார். இருப்பினும், ஓவியாவின் பெயர் ட்ரெண்டிங்கில் தான் இருந்து வருகிறது.

இதன் காரணமாக ஓவியா பல பேட்டிகளில் பேசிய விஷயங்களைப் பற்றிய தகவலையும் இணையவாசிகள் தோண்டி எடுத்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அப்படி தான் அவர் முன்னதாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்த போது தன்னுடைய காதல் தோல்விகள் குறித்து வேதனையுடன் பேசிய விஷயத்தை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Read More- இவங்கள பாத்து கத்துக்கோங்கப்பா! பெண்களுக்கு முன்னுதாரணமான ‘ஓவியா’!

அந்த பேட்டியில் ஓவியா பேசுகையில், “என்னுடைய வாழ்க்கையில் நான் பல விதமான கஷ்டங்களைச் சந்தித்து இருக்கிறேன். நான் பலருடன் உறவிலிருந்திருக்கிறேன். காதல் இருந்திருக்கிறது. அது எதுவும் கடைசி வரை நிலைக்கவில்லை. அதனால் நான் அந்த சமயம் வேதனையாக இருப்பேன். இப்போதும் வேதனைகள் இருக்கும். ஆனால், அதேயே நினைத்துக்கொண்டு இருந்தால் எதுவும் நடக்காது.

லிவிங் டு கெதர் வாழ்க்கையில் கூட நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இருப்பவர்கள் யோசித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதனை மட்டும் செய்துகொண்டே இருங்கள். தனிப்பட்ட விஷயத்துக்காக யாரையும் தொந்தரவு செய்யக்கூடாது” என அட்வைஸ் கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய ஓவியா “எனக்கு காதல் தோல்விகள் மட்டும் இல்லை பண விஷயங்களில் என்னைப் பலர் ஏமாற்றி இருக்கிறார்கள். நம்ப வைத்து என்னுடைய பணத்தை என்னிடம் இருந்தே எடுத்து நம்பிக்கை துரோகம்  செய்தார்கள்” எனவும் வேதனையுடன் நடிகை ஓவியா பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்