உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம் …! குடியரசுத் தலைவர் ஆணை …!அக்டோபர் 3ம் தேதி பதவியேற்பு!

Default Image

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்துள்ளார்.

Related image

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் அக்டோபர் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. பணியில் இருந்து ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து அந்தப் பதவிக்கு தகுதியானவரின் பெயரை பணி மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன்படி உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோயை மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார்  தீபக் மிஸ்ரா.
இந்நிலையில் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்துள்ளார்.மேலும் அக்டோபர் 3-ம் தேதி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்.உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்