“என் நெஞ்சில் கொழுந்துவிட்டு எரியும் லட்சிய கனல்.,” த.வெ.க தலைவர் விஜய் ஆவேசம்..,

மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை அரசியல் ரீதியாக நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே என் நெஞ்சில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் லட்சியக் கனல். - தவெக தலைவர் விஜய்.

TVK leader Vijay

சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாடு நடைபெறும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று அதிகாலை பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இன்று தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மாநாடு தொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், பல்வேறு அரசியல் கருத்துக்களையும், தனது தொண்டர்களுக்கான அறிவுரையையும் வழங்கினார்.

அந்த அறிக்கையில்,  ” உங்களை நான் நினைக்காத நாளில்லை. நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவுபோன்றது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்த முதல் கடிதம். தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத மக்களுக்காக., அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.

அதை, அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக, உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான், என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல். இன்று. நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா (பூமி பூஜை) இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம் மட்டுமல்ல நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.” என்று அந்த அறிக்கையில் தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது தவெக தொண்டர்களுக்கு அறிவுரை., தனது அரசியல் போக்கை விமர்சித்தவர்களுக்கு பதில் என நீண்ட அறிக்கையை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்