சிறகடிக்க ஆசை சீரியல் குடும்பத்தில் கலை கட்டிய நவராத்திரி திருவிழா..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 2]எபிசோடில்  கொலு பூஜைக்காக விஜயா பாடிய பாடல் .. ஒன்ஸ்மோர்  கேட்கும் அண்ணாமலை .

muthu,meena (18) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 2]எபிசோடில்  கொலு பூஜைக்காக விஜயா பாடிய பாடல் .. ஒன்ஸ்மோர்  கேட்கும் அண்ணாமலை .

முத்துவின் போனை திருட பிளான் போடும் ரோகினி ;

மீனா கொலு  பொம்மைகள் எல்லாம் அழகா அலங்காரம் பண்ணி வச்சிருக்காங்க இத பாத்த முத்து நீயே கொலு பொம்மை   மாதிரி தான் இருக்கிற மீனா.. நீயும் உட்கார்ந்துக்கோ அப்படின்னு ரொமான்டிக்கா பேசுறாரு  அப்போ நீங்களும் என் பக்கத்துல உக்காந்துகோங்கன்னு மீனா சொல்லுறாங்க  இதை பார்த்துட்டே  வித்யாவும் ரோகிணியும் வராங்க.. இப்போ எல்லாருமே வீட்டுக்கு  வர ஆரம்பிக்கிறாங்க.. வித்யா கேட்கிறாங்க என்னடி கூட்டம் ரொம்ப அதிகமா இருக்குது அப்படின்னு.. ஆமாடி எப்படியாவது இன்னைக்கு முத்துவோட போனா போனை எடுத்திறனும்  அப்படின்னு பிளான் பண்ணி பேசிட்டு இருக்காங்க..மீனாவோட அம்மாவும் வர்ராங்க .இத பார்த்த விஜயா எப்பவும் போல மட்டமாபேசுறாங்க ..

விஜயாவின் பாட்டைக்கேட்டு குரைக்கும்  நாய்கள் ;

meena (7) (1)

இப்போ  விஜயாவோட ஸ்டூடண்டான தீபனும் ரதியும்   வராங்க.. பாத்தியா மாஸ்டர் நம்மள கொலு பூஜைக்கு எல்லாம் கூப்பிட்டு இருக்காங்க.. நாம  அவங்க  கிட்ட நல்ல பேரை எடுக்கணும் அப்படின்னு பேசிக்கிட்டே உள்ள வராங்க.. விஜயாவும் வாங்கன்னு வரவேற்க்குறாங்க..  விஜயா கிட்ட ஆசிர்வாதம் வாங்கறாங்க விஜயா ஆசீர்வதித்து நீங்க ரெண்டு பேரும் அரங்கேற்றம் பண்ணி என்ன பெருமைப்படுத்தணும் அப்படின்னு வாழ்த்துறாங்க .இத பாத்த முத்துவும் மீனாவும் இது சரி இல்லையே அப்படின்னு பேசிக்கிறாங்க.. இப்ப கொலு  பூஜை ஆரம்பிச்சாச்சு.. விஜயாவும்  பாடறதுக்கு முன்னாடி ரொம்ப பில்டப் எல்லாம் பண்றாங்க. இப்போ பாட ஆரம்பித்ததும் நாய் குறைக்கிற சத்தம் கேட்குது ஆனாலும் விடாம  பாடுறாங்க நிறைய நாய் சத்தம் போடுது.. முத்துவும் என்னப்பா அம்மா குரலு ஏதோ தார் ரோட்டில் தகர டப்பா ஓடற மாதிரி இருக்கு அப்படின்னு கிண்டல் பண்றாரு..

இந்த பக்கம் ரோகினையும் வித்யாவும்  விஜயா பாடற பாட்ட பார்த்து கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இருக்காங்க..ஆனா அண்ணாமலை விஜயாவை சந்தோச படுத்த  ஒன்ஸ்மோர் கேட்டுட்டே இருக்காரு .. விஜயாவும் படிக்கிட்டே இருக்காங்க  இப்போ நிறைய நாய் சத்தம் போட்டது பக்கத்து வீட்டுக்காரர் என்னப்பா கொலு பூஜை  பண்றது நல்ல விஷயம் தான் ஆனா உங்க அப்பா ஏன் உங்க அம்மா குரல்ல பாடுறாரு அப்படின்னு பக்கத்து வீட்டுக்காரர் கிண்டல் அடிக்கவும் விஜயாவே பாட்டை நிறுத்திடறாங்க. இப்ப மீனாவை பாட சொல்றாங்க மீனா சூப்பரா பாடி முடிக்கிறாங்க ..எல்லாருமே பாராட்டுறாங்க கை தட்டுறாங்க.. இப்ப கொலு பூஜை  முடுஞ்சு  எல்லாருமே வீட்டுக்கு போயிடறாங்க. முத்து மீனாவோட காலை பிடுச்சு  விடுறாரு .. மீனா உனக்குள்ள எவ்வளவு திறமை இருக்கு நீ சகலகலா வள்ளி  அப்படின்னு பாராட்டி தள்ளுறாரு.. இதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சு இருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்