மருத்துவமனையில் ரஜினி: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரசிகர்கள் சிறப்பு பூஜை.!

ரஜினி பூரண குணம் அடைய வேண்டி, கோவிலில் வைத்து பெண்களுக்கு திருமாங்கல்யத்தை பிரசாதமாக வழங்கினர் ரஜினி ரசிகர்கள்.

Rajinikanth - fans

சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள் கிழமை (செப்.30) அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் அயோட்டா தமனியில் வீக்கம் இருந்தது.

முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் சாய்சதீஷ், வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் அடைக்கும் வகையில் ஸ்டென்ட் உபகரணத்தை இடையீட்டு சிகிச்சை மூலம் அந்த இடத்தில் பொருத்தினார். இந்த ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை திட்டமிட்டபடி அவருக்கு சரியாக  செய்யப்பட்டது.

தற்போது, ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது. அவர் இரு நாள்களில் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினி பூரண குணம் அடைய வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரஜினி ரசிகர்கள் சார்பாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், கோவிலில் வைத்து பெண்களுக்கு திருமாங்கல்யத்தை பிரசாதமாக வழங்கினர் ரஜினி ரசிகர்கள். இதனிடையே, ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக, இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்