திருப்பதி லட்டு விவகாரம் : நடிகர் ரஜினிகாந்த் சொன்ன பதில்!

 'கூலி' திரைப்படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார்.

tirupati laddu rajinikanth

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதமான லட்டு குறித்த சர்ச்சை நாடு எங்கிலும் பேசும் பொருளாகவே அமைந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என பலர் இது குறித்து விமர்சித்து பேசி வருகின்றனர். அதில் பலர் கூறியது சர்ச்சையாகவும் மாறி பின் தணிந்தது.

அந்த வகையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், இந்த லட்டு விவகாரம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். வெற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு, ரஜினிகாந்த் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது அங்கு அவரை வரவேற்ற பத்திரிகையாளர்கள் அவரிடம், ‘இப்படி திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக  சர்ச்சைகள் எழுத்துள்ளதே அதற்கு உங்களது கருத்து என்ன?’ என்று கேட்டனர். அதற்கு, சற்றும் யோசிக்காத ரஜினிகாந்த், ‘சாரி … நோ கமெண்ட்ஸ்’ என்று பதிலளித்தார்.

ஏற்கனவே, எழுந்த சர்ச்சையான ஹேமா கமிட்டி சர்ச்சை தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போதும், அதற்கும் அவர், ‘சாரி..எனக்கு தெரியாது’ என பதிலளித்தார். மக்களால் கவனிக்கப்படும் முக்கிய செலிபிரிட்டியாக இருந்து வரும் ரஜினிகாந்த் இப்படி சமூகத்தில் பிரச்சினைக் குறித்து பெரிதும் கண்டு கொள்ளாமல் இருப்பது நெட்டிசன்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.

இப்படி இருக்கையில் அவரது ரசிகர்களிடையே, ‘கருத்து சொல்வது அவரது தனிப்பட்ட விறுப்பம்’ என்று அவருக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.  சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்த், அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்த ரசிகர்களின் குழந்தைகள் வரைந்து கொடுத்த படங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுடன் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்