சிறகடிக்க ஆசை சீரியல்- லெட்டர் கொடுத்தது முத்துவா? கடும் கோபத்தில் மனோஜ் ..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 27] எபிசோடில் முத்து மீனாவை வீட்டை விட்டு போகச் சொல்கிறார்  விஜயா..

Rohini (5) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 27] எபிசோடில் முத்து மீனாவை வீட்டை விட்டு போகச் சொல்கிறார்  விஜயா..

முத்துவை மாட்டிவிடும் பி ஏ ;

விஜயா டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க அப்போ அந்த ரதியையும் தீபனையும் வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க.. மீனா சொன்ன மாதிரியே அவங்க நடவடிக்கையும் சரியில்லாம இருக்குது.. உடனே ரதியை கூப்பிட்டு முன்னாடி நின்னு ஆட சொல்றாங்க. இதை பார்த்த தீபன் என்ன மாஸ்டர் எங்க மேல சந்தேகப்படுறீங்களான்னு கேக்குறாரு. அது இல்லப்பா உங்க மேல சந்தேகப்பட்டா  நான் ஏன் உங்களை இந்த கிளாஸ்ல சேர்க்க போறேன் அப்படின்னு சொல்லி சமாளிக்கிறாங்க. இனிமேல் நீங்க இப்படியே நின்னு ஆடுங்க தனியா எல்லாம் போயி பிராக்டிஸ் பண்ண வேணாம் நான் சொல்றத மட்டும் நீங்க பண்ணா போதும் அப்படின்னு சொல்றாங்க. இப்போ விஜயாவுக்கு பார்வதி டீ கொண்டுவந்து கொடுக்குறாங்க .

பார்வதி சொல்றாங்க அந்த தீபனோட பார்வையை சரியில்ல மீனா சொன்னது சரியா தான் இருக்கும் விஜயா.. இவங்க பாட்டுக்கு லவ் பண்ணி ஓடி போய்ட்டாங்கன்னா அப்புறம் போலீஸ் இங்கேதான் வருவாங்க தேவையில்லாத பிரச்சனை எல்லாம் வரும்  அப்படின்னு சொல்ல உடனே விஜயா அதெல்லாம் ஒன்னும் நடக்காது நான் பாத்துக்குறேன் பார்வதி அப்படின்னு சொல்றாங்க.. இப்போ மனோஜ்  லெட்டர் கொடுத்தவன தேடி கோவிலுக்கு  போறாரு .. ரோகினி நினைச்ச மாதிரியே அந்த பிஏ தான் சாமியார் வேஷம் போட்டு வந்திருக்காரு. சாமியாரை பாக்குற மனோஜ் ரோகிணி  நம்ம ரெண்டு பேரும் இந்த சாமியார் கிட்ட குறி கேட்க போலாம்னு போறாங்க. உடனே அந்த பிஏ ரோகிணியை பார்த்து கல்யாணி கலை அவங்க முகத்துல தாண்டவம் ஆடுது அப்படின்னு சொல்றாரு. மனோஜ பார்த்து உன் முகத்தில்  தொழில் அதிபர் கலை  தெரியுது .

shruthi (2) (1)

லெட்டர் விஷத்தை வீட்டில் சொல்லும் மனோஜ் ;

இதெல்லாம் எப்படி சாமி உங்களுக்கு தெரியும் அப்படின்னு மனோஜ் கேட்க எங்களுக்குன்னு ஒரு ஞான தீட்சை இருக்குன்னு சொல்றாரு . உன் பேரு  கூட மனோஜ் குமார் தானே அப்படின்னு கேக்குறாரு.. இவ்வளவு கரெக்டா சொல்றாரே அப்படின்னு அந்த லெட்டர் கொடுத்தவன பத்தி விசாரிக்கிறாரு.. இப்போ அந்த பிஏ என்கிட்ட இப்பதான் ஒருத்தரு உங்க கிட்ட லெட்டர் கொடுக்க சொல்லிட்டு போறாருன்னு லெட்டர் கொடுக்க  உடனே அந்த லெட்டர மனோஜ் படிக்குறாரு . என்னோட பேரு என்னன்னா சூப்பர் ஸ்டார் நடிச்ச படத்தோட ஒரு பேரு தான் அப்படின்னு எழுதிருக்கு  உடனே மனோஜ் பக்கத்துல இருந்த பாடிகார்டு கிட்ட கேட்க அவர் முத்து னு சொல்றாரு .நெனச்சேன் அந்த முத்துவோட வேலையா தான் இருக்கும்ன்னு. இப்போ போட்டோவை அந்த பி ஏ கிட்ட காட்டி  உங்ககிட்ட லெட்டர் கொடுத்தது இவன்தானா .

உடனே அந்த பிஏவுக்கு இவன் தான் நம்மள போலீஸ்ல மாட்டி விட்டான் அப்படின்றது நியாபகத்துக்கு வருது இப்ப முத்துவை மாட்டி விட்டார்.. கோவத்துல மனோஜ் வீட்டுக்கு போறாரு ரோகிணி சொல்லுறாங்க  அவசரப்படாத மனோஜ் .. இப்போ அந்த பிஏ ரோகினி கிட்ட 30 லட்சம் கொடுக்குற வரை இப்படித்தான் நடக்கும் கல்யாணி அப்படின்னு சொல்றாரு .வீட்டுக்கு போற மனோஜ் விஜயா கிட்ட முத்து தான் இந்த வேலையை பார்த்து இருக்கிறான் நான் கண்டுபிடிச்சிட்டேன் அப்படின்னு சொல்ல.. வீட்ல இருக்குற யாருக்குமே எதுவுமே புரியல  .இப்ப ஸ்ருதி  கேக்குறாங்க என்ன லெட்டர் என்ன ஆச்சுன்னு கேட்க விஜயா லெட்டர் கொடுத்த விஷயத்தை எல்லாம் சொல்றாங்க.. இப்போ விஜயா முத்துவை திட்ட ஆரம்பிக்கிறாங்க. மீனா சொல்றாங்க அவர் இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ண மாட்டாரு எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா தான் பேசுவார் .

இதுக்கு   விஜயா சொல்றாங்க. முதல்ல நீங்க வீட்டை விட்டு வெளிய போங்க நீயும்  அவனும் சேர்ந்து தான் இதை பண்ணி இருப்பீங்க .அப்படின்னு சொல்ல அண்ணாமலை சொல்றாரு எதுவுமே தெரியாம பேசாத விஜயா.. என்னைய தற்கொலை பண்ணிக்குவான்னு எழுதி இருக்கிறான் . மீனா மறுபடியும் அவர பத்தி தப்பா பேசாதீங்க ன்னு சொல்றாங்க. இப்ப மனோஜ் சொல்றாரு இத போலீஸ்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கணும் அப்படின்னு சொல்லவும் மீனா மனோஜ் முறைக்கிறாங்க ..இதோடஇன்னைக்கு  எபிசோட முடிச்சு  இருகாங்க ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்