மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. மாணவர்கள் 4 பேர் பலி.!

இந்த விபத்தில், ரீதர், நிதிஷ்குமார், வாசு மற்றும் சதீஸ் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக போலீசார் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

virudhunagar accident

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் மினி பஸ் ஒன்று எதிர்பாரா விதமாக, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை அதுவுமா இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

சம்பவ இடத்தில் தீயணைப்பு துறை மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கோர விபத்தில் சிக்கி பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்தது.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 3 பேர் பள்ளி மாணவர்கள் என்றும், ஒருவர் கல்லுரி மாணவர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே, தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் பள்ளி நேரங்களான காலை மாலை இரு வேளைகளிலும் கூடுதல் பஸ் இயக்கக் கோரியும் மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையை அகலப்படுத்த கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்