குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவு எப்போது? வெளியானது அறிவிப்பு.!

குரூப் 2, 2 ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

Group 2 Exam Result

சென்னை: டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு கடந்த செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்றது. இதற்கு, 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். ஆனால், அதில் 2.5 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதேபோல, 2025 பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, குரூப் 2 குரூப் 2A தேர்வுகளின் மாதிரி விடைகள் வெளியிடப்பட்டிருந்தது. விடைகள் சம்பந்தமாக ஏதேனும் முறையீடுகள் இருந்தால் எப்படி அணுகுவது என்ற வழிமுறையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்