மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

மணிமேகலை பிரச்சினையில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த காரணத்தால் பிரியங்கா தன்னிடம் வருத்தப்பட்டு அழுததாக வனிதா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

vanitha priyanka deshpande cry

சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம். பிரச்சினைக்கான முக்கிய காரணமே, நிகழ்ச்சியில் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தவிடாமல், பிரியங்கா அவருடைய ஆதிக்கத்தைச் செலுத்தியதற்காகத் தான் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாகக் குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார்.

இதன் காரணமாகத் தான் பிரியங்காவின் குணம் மிகவும் மோசம் எனக் கூறி நெட்டிசன்கள் மிகவும் வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து இன்னும் பிரியங்கா தன்னுடைய தரப்பிலிருந்து எதுவும் பேசவில்லை. ஆனால், தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டுக் கண்கலங்கி இருக்கிறார். இந்த தகவலை அவருக்கு நெருக்கமாக இருக்கும் நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வனிதாவிடம் மணிமேகலை VS பிரியங்கா பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த வனிதா ” நான் இந்த பிரச்சனை குறித்து மணிமேகலைக்குக் கால் செய்து நான் பேசவில்லை. ஆனால், பிரியங்காவிடம் பேசினேன். அவர் இந்த விஷயத்தில் ரொம்பவே வேதனையடைந்தார்.

அவர் இப்போது நம்மாளுடைய நாட்டில் இல்லை. அவர் வேலை விஷயமாக வெளியே சென்று இருக்கிறார். அதையும், பலர் பிரியங்கா இந்த பிரச்சனை காரணமாகத் தான் நாட்டை விட்டு ஓடிவிட்டார் என எழுதுகிறார்கள். ஆனால், அந்த பொண்ணு இந்த பிரச்சனைகள் தொடங்குவதற்கு முன்பே டிக்கெட் புக் செய்து அயர்லாந்திற்குச் சென்று இருக்கிறார்.

கால் செய்து பேசும்போது அப்படிக் கண்கலங்கி என்னிடம் கதறி அழுதார். அதனைப் பார்க்கும்போது ரொம்பவே பாவமாக இருக்கிறது. ஒரு பெண்ணுடைய மனது பொண்ணுக்கு தான் தெரியவேண்டும். நிகழ்ச்சியில், எதோ ஈகோ பிரச்சினை காரணமாக இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. அதனை இருவரும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த மாதிரி சமயத்தில் பிரியங்காவுடைய குணத்தை அசிங்கப்படுத்தி வருகிறார்கள். எனவே, அவருக்கு ஆதரவாகச் சிலர் பேசும்போது அவர்களைச் சொம்பு என்பது போலப் பேசி மணிமேகலை வீடியோ போடுவது நல்லது அல்ல. இனிமேல் அதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம்” எனவும் மணிமேகலை அட்வைஸ் செய்து பிரியங்கா வேதனைப் பட்ட விஷயத்தையும் வனிதா பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்