சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்..

Rohini (4) (1)

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்..

முத்துவின் செல்லை திருடும் ரோகிணி ;

முத்து சொல்றாரு கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட சுதந்திரமே போச்சு .. மீனா அது என்னனு  கேட்டு நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க கல்யாணத்துக்கு அப்புறம் பொறுப்பு வந்துருச்சுன்னு நினைச்சுக்கோங்க.. எத்தனையோ பேரு கல்யாணம் ஆகாம இருக்குறாங்க..  நீ சொல்றதும் சரி தான் அப்படின்னு முத்து  சொல்லுறாரு . இப்போ காலையில முத்து ரொம்ப லேட் ஆயிடுச்சுனு  எந்திரிச்சு செல்ல சார்ஜ் போட்டு குளிக்க போய்ட்டாரு அந்த டைம்ல கழுகு மாதிரி காத்திருந்த ரோகிணி முத்துவோட செல்போன  எடுத்து வேகமா செக் பண்றாங்க இப்போ முத்து மறுபடியும் வர்றாரு அத பாத்து ரோகிணி டக்குனு கட்டுலுக்கடியில் போய் படுத்துகிறாங்க.

இப்ப முத்து மீனா கிட்ட எனக்கு சாப்பாடு ஊட்டி விடு அப்படின்னு சொல்ல மீனாவும் நேத்து நீங்க ஊட்டி விட்டதுக்காக என்ன இன்னைக்கு ஊட்டி விட சொல்றீங்களா அப்படின்னு கேக்குறாங்க ..இதெல்லாம் ரோகிணி கேட்டுட்டு சரி நம்ம அந்த வீடியோவை செக் பண்ணுவோம்னு  செக் பண்றாங்க. சத்யாவோட வீடியோ பாத்துட்டு ரொம்ப சந்தோஷப்படுறாங்க அந்த சிட்டி சொன்னது கரெக்டு தான் அப்படின்னு சொல்லிட்டு சரி இந்த வீடியோவை  நம்ம செல்லுக்கு அனுப்பிறலாம்னு அனுப்ப போறாங்க ஆனா செல்லு மறுபடியும் சுவிட்ச் ஆப் ஆயிடுது இப்ப இன்னொரு பக்கம் மனோஜ் விஜயா கிட்ட அம்மா எனக்கு 500 ரூபாய் வேணும்னு கேட்க அதற்கு விஜயா  சொல்றாங்க ஏண்டா நீ தான் இப்ப சொந்தமா கடை  வெச்சிருக்கறியே இப்பவும் என்கிட்ட காசு கேட்கிற . இல்லம்மா இப்ப எல்லாமே டிஜிட்டல் பேமெண்ட் வந்துருச்சுல்ல அதனால அமௌன்ட் இல்லம்மா.

vijaya,manoj (1) (1)

விஜயாவிடம் பணம் கேட்கும் மனோஜ் ;

சரி நீ உங்க அப்பா கிட்ட கேளு என்கிட்ட இல்ல அப்படின்னு சொல்றாங்க . இப்ப அண்ணாமலை கிட்ட மனோஜ் போய் அப்பா எனக்கு 500 ரூபாய் வேணும்னு கேட்க அண்ணாமலை எங்கிட்ட 300 ரூபா  தாண்டா இருக்கு. ஃபர்ஸ்ட் நீ உன் கிட்ட இருக்கு அந்த 500 ரூபாயை கொடு அப்புறம் நான் 300 ரூபாய் தரேன் அப்படின்னு சொல்ல அதுக்கு மனோஜ்  சொல்றாரு அந்த முத்து கேட்டிருந்தால் இந்நேரம்  கொடுத்து இருப்பீங்க தானே அப்படின்னு சோகமா சொல்றாரு. இவ்வளவு ரோசம்  இருந்தா அந்த மொத்த பணத்தையும் கொண்டு வந்து குடுடா அப்படின்னு அண்ணாமலை சொல்றாரு. நீங்க எனக்கு காசே கொடுக்க வேண்டாம் ரோகிணி ரோகிணி அப்படின்னு ரோகிணிய  தேடி போறாங்க. ரோகிணி  கட்டிலுக்கு கீழ படுத்திருக்காங்க .இப்போ முத்து செல்ல எடு மீனா அப்படின்னு சொல்ல மீனா எங்கங்க செல்லு இங்க இல்ல அப்படின்னு சொல்லவும் இப்ப ரெண்டு பேருமே செல்ல தேடுறாங்க.

இந்த டைம்ல  ரோகினி செல்ல வச்சுட்டு  மாடிக்கு போயிடுறாங்க.. முத்து மனோஜ் கிட்ட கேக்குறாரு என் செல்ல எடுத்தாயடா அப்படின்னு ..அதுக்கு மனோஜ் என்ன எல்லாத்துக்குமே என்னதான் சொல்லுவியா நீ.. இப்போ ரோகிணி  கீழ இறங்கி வராங்க எங்க ரோகிணி போன அப்படின்னு மனோஜ் கேட்க தலை ஈரமா இருந்துச்சு அதான் மாடில காய வச்சுட்டு இருந்தேன் அப்படின்னு சொல்லி சமாளிச்சுட்டு போறாங்க. இப்ப மீனா செல் எடுத்துட்டு வந்து குடுக்குறாங்க..  குடிச்சா இப்படித்தான் செல்ல எங்கே வச்சான்னு கூட ஞாபகம் இருக்காது அப்படின்னு  கொண்டு வந்து கையில கொடுக்குறாங்க.. முத்து ஒன்னுமே புரியாம இல்லையே நான் சார்ஜ் போட்டு தானே போனேன் அப்படின்னு யோசிக்கிறாரு. இப்போ ரவியும் அவரோட ஓனரோட பொண்ணும்  ரெஸ்டாரண்டுக்கு பிளேட் வாங்கலாம்னு கடைக்கு வந்து இருக்காங்க.

இவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா பேசுகிறத பார்த்து ஸ்ருதி  அம்மாவுக்கு சந்தேகம் வந்துடுது . இப்போ ரவி ஆண்ட்டினு பேசுறாரு இவங்க என்னோட ஓனரோட பொண்ணு ரெஸ்டாரன்ட் விஷயமா வெளியில வந்திருக்கிறோம் அப்படின்னு சொல்றாங்க.  எனக்கு வேல  இருக்க ஆண்ட்டி நான் கிளம்புறேன்னு ரவி கிளம்பிட்டாரு .இப்ப ஸ்ருதியோடு அம்மா இது சரி இல்லையே அப்படின்னு சொல்லி  ஸ்ருதிக்கு கால் பண்றாங்க ஆனா சுருதி போன் அட்டென்ட் பண்ணவே இல்ல இதோட இன்னைக்கு  எபிசோட முடிச்சிருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்