சர்ச்சைகளுக்கு மத்தியில் டைட்டில்! குக் வித் கோமாளி 5 வின்னர் பிரியங்காவா?

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா தான் வெற்றியாளர் என தகவல்கள் தீயாக பரவி வருகிறது.

cook with comali final

சென்னை : தமிழ் சினிமாவில் தற்போது பற்றி எரியும் தீயை போல கிளம்பியுள்ள பிரச்சனை என்றால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து  மணிமேகலை விலகியது தான்.  அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு முக்கியமான காரணமே பிரியங்கா தான். ஏனென்றால், நிகழ்ச்சியில் பல முறை மணிமேகலையை ஆங்கரிங் வேலையை செய்யவிடாமல் அவர் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இந்த சீசனில் என் உரிமைகளைக் கேட்பதும், கவலையை தெரிவிப்பதும் கூட ஒரு குற்றமாகிவிடுகிறது. ஆனால் எனக்கு சரியானது எதுவோ அதற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன், யாரைப் பற்றியும் நான் கவலைப்படமாட்டேன்.

புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், பரவாயில்லை. சுயமரியாதை விஷயத்தில் எல்லாமே இரண்டாம் பட்சம்தான். எனவே நான் ‘குக் வித் கோமாளி’யில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன் ” என நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம்சூசகமாக பிரியங்கா தான் என பெயரை குறிப்பிடாமல் அறிவித்திருந்தார்.

அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாகவும், பிரியங்காவிற்கு எதிராக பேசியும் வருகிறார்கள். இந்த சூழலில், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று பிரியங்கா தான் வெற்றியாளர் என ஒரு தகவலும் வெளியாகி வைரலாக பரவிக்கொண்டு இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 5-நிகழ்ச்சிக்கான இறுதிப்போட்டி அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப்போட்டியில் சுஜிதா, பிரியங்கா, இர்பான் ஆகியோர் மோதிய நிலையில், அதில் பிரியங்கா தான் வெற்றிபெற்று டைட்டிலை தட்டிச்சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஏற்கனவே, மணிமேகலை அவரால் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இந்த சூழலில், அவர் வின்னர் என தகவல் பரவி வருவதால் இன்னுமே ரசிகர்கள் திட்டிவருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்