சிறகடிக்க ஆசை சீரியல்.. மனோஜிடம் பணம் பறிக்க ரோகிணி போடும் மாஸ்டர் பிளான்..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ செப்டம்பர் 14] எபிசோடில் மனோஜ் ரோகினிக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார்.. வித்யாவும் மனோஜை ஏமாற்றி பணம் வாங்குகிறார்..

MUTHU ,MEENA (2) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ செப்டம்பர் 14] எபிசோடில் மனோஜ் ரோகினிக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார்.. வித்யாவும் மனோஜை ஏமாற்றி பணம் வாங்குகிறார்..

நேற்று  நடந்த பிரச்சனைக்காக ரோகிணி மனோஜ் கிட்ட சாரி சொல்லுறாங்க . மனோஜூம்  இனிமே அந்த ஜீவா பெயரை இழுக்காத அப்படின்னு சொல்றாங்க.. ரோகினி சரி மனோஜ் என்று சொல்லிட்டு நான் என் பிரண்டு கிட்ட பணம் இல்லைன்னு சொல்லிடுறேன்  மனோஜ் அப்படின்னு சொல்றாங்க .ஆனா  மனோஜ் நீ அப்படி சொல்லாத ரோகினி நம்ம பணத்தை வட்டிக்கு கொடுக்கலாம் அப்பதான் நம்ம பணம் சீக்கிரம் கிடைக்கும். உடனே ரோகினி இதுவும் சூப்பர் ஐடியாவா இருக்கு அப்படின்னு சொல்றாங்க. இப்போ செல்வம் கார் செட்டில் இருக்கிற எல்லா பிரண்ட்ஸ் கிட்டையும் பங்ஷனுக்கு  ரெண்டு நாள் தான் இருக்கு நீங்க காலையில சீக்கிரமா வந்துருங்க அப்படின்னு சொல்றாங்க ..அந்த டைம்ல மீனா வராங்க.

அண்ணே உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் அப்படின்னு செல்வத்திடம்  கேக்குறாங்க செல்வமும் சொல்லுங்க சிஸ்டர் அப்படின்னு சொல்ல, தங்கச்சினு  உரிமைல நான் உங்ககிட்ட இதெல்லாம் பேசணும்னு நினைக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு நீங்களும் அவரும் ஏசி ரூம்ல வேலை பார்க்கல நமக்கு பணத்தோட அருமை நல்லா தெரியும்.. சேர்த்து வச்ச காசெல்லாம் ஒரே நாள்ல செலவு பண்ணிட்டா அடுத்து என்ன பண்றது கொஞ்சம் யோசிங்க அண்ணே அறுபதாம் கல்யாணத்தை சிம்பிளாவே பண்ணலாம்ல மத்தவங்க பண்றாங்கன்னு நாம பண்ணுனா வாழவே முடியாது.. மத்தவங்க முன்னாடி நம்மள ஆடம்பரமா காட்டிக்க வேண்டாமே அப்படின்னு சொல்றாங்க..

MANOJ ,ROHINI (1) (1)

இதெல்லாம் கேட்டு செல்வம் சரிமானு சொல்லிறாரு.. ஆனா அவரு முகமே மாறி இருக்கு.. இப்போ மனோஜ் ஷோரூம் ல வித்யா அழுதுகிட்டே ரோகிணிய பார்க்க வராங்க.. ரோகிணி என்னாச்சுன்னு கேட்க அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணனும் திடீர்னு எனக்கு 75 ஆயிரம் பணம் தேவைப்படுதுன்னு ஒரே அழுகை அழுகுறாங்க   இதை பார்த்துட்டு மனோஜ் நான் தரேன் உன்னோட அக்கவுண்ட் டீடைல்ஸ் எல்லாம் கொடுனு  கேட்கிறாரு .. வித்யாவும்  ரொம்ப நன்றி மனோஜ்னு சொல்லிட்டு கிளம்புறாங்க.. பின்னாடியே ரோகினி போறாங்க ஆனா இது ரோகினி ஓட மாஸ்டர் பிளான் தான்னு  அப்புறம் தான் தெரியுது.. எங்க நீ சொதப்பிரிவுன்னு நினைச்சேன்டி சூப்பரா நடிச்சுட்ட அப்படின்னு ரோகினி வித்யாவை பாராட்டுறாங்க..

இப்போ செல்வம் கார்செட்ல  இருக்குற பிரண்ட்ஸ் கிட்ட எல்லாம்  மீனா வந்துட்டு போன விஷயம் முத்துக்கு தெரிய வேண்டாம் இதனால அவங்க ரெண்டு பேருக்குள்ள எந்த பிரச்சனையும் வர  கூடாது அப்படின்னு சொல்றாங்க.. இப்ப முத்து வராரு ..டேய் இந்தாடா ஒரு லட்சம் பணம் இருக்கு நீ ஆக வேண்டியது பாரு யாருக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுக்கணுமோ அவங்களுக்கெல்லாம் கொடுத்துடு அப்படின்னு சொல்றாரு ..ஆனால் செல்வம் வாங்க மறுக்கிறார். இல்லடா முத்து நான் ஊர்ல சிம்பிளா அறுபதாம் கல்யாணத்தை பண்ணலாம்னு நினைக்கிறேன்.. என்னடா நீ தானே சிறப்பா பண்ணனும்னு சொன்ன இப்ப என்ன இப்படி பேசற அப்படின்னு முத்து கேக்குறாரு.. இல்ல முத்து உனக்கும் செலவு இருக்குல்ல .. தேவை இல்லாம எதுக்கு இவ்வளவு ஆடம்பரச் செலவு அப்படின்னு சொல்றாரு. என்னடா உன் பேச்சை சரி இல்லையே அப்படின்னு கேக்குறாரு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்