அக்டோபருக்கு செல்லும் தவெக மாநாடு.. விஜய்க்கு மீண்டும் சோதனை.!

தவெக மாநாடுக்கு குறுகிய காலத்தில் ஏற்பாடுகள் செய்ய முடியாது என்பதால் தேதியை மாற்ற விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

vijay tvk

சென்னை : விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் மாதத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, விக்கிரவாண்டியில் தவெக மாநாடு இம்மாதம் 22ம் தேதி நடக்கலாம் எனக் கூறிய நிலையில், 23ஆம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இருப்பினும், குறுகிய காலமாக இருப்பதால் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு தேதி குறித்த தகவலை விஜய் இன்று அறிவிப்பார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, செப்டம்பர் 23இல் மாநாடு நடத்த அனுமதி பெற்ற நிலையில், மாநாடு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். அதன்படி, அக்டோபர் முதல் இரண்டு வாரத்திற்குள் ஏதேனும் ஒரு தேதியில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு தகவலின்படி, மாநாடு அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. அக்டோபர் 15 அன்று அப்துல் கலாம் பிறந்தநாள். அன்றைய தினம் நடத்தலாம் என திட்டமிட்டுள்ளனர். இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அக்டோபர் 15-ல் மாநாடு நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டு நாளை கடிதம் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் மாநாடு தேதியை மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்