சிறகடிக்க ஆசை சீரியல் -முகம் தெரியாத நபர் கொடுத்த லெட்டர்.. லெட்டரை படித்த மனோஜ் அதிர்ச்சி..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 9]எபிசோடில்  மனோஜ்க்கு மீண்டும் ஒருவர் லெட்டர் கொடுக்கிறார் அதை படித்துவிட்டு மனோஜ் அதிர்ச்சியாகிறார்..

manoj (5) (1)

சென்னை –சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 9]எபிசோடில்  மனோஜ்க்கு மீண்டும் ஒருவர் லெட்டர் கொடுக்கிறார் அதை படித்துவிட்டு மனோஜ் அதிர்ச்சியாகிறார்..

விஜயா மீனாவிடம் டான்ஸ் ஸ்கூலுக்கு சாப்பாடு கொண்டு வருமாறு கூறுகிறார்.. அந்த நேரத்தில் முத்துவும் அண்ணாமலையும் வந்துடுறாங்க.. அவ வேலை செஞ்சிட்டு இருக்கா  அவ எப்படி சாப்பாடு கொண்டு வருவா அப்படின்னு அண்ணாமலை சொல்றாரு.. உடனே மீனா அத்தை நான் இப்பவே சாப்பாடு உங்களுக்கு கட்டி தரேன்னு சொல்றாங்க.. அதுக்கு விஜயா  சொல்றாங்க பூ கற்ற உனக்கு  சூடா சாப்பிடணும் மதியம் நான் ஆறிப்போன சாப்பாட சாப்பிடனுமா  அப்படின்னு கேக்குறாங்க.. அண்ணாமலை சொல்றாரு நான் வேணா உனக்கு மதியம் கொண்டு வந்துடறேன். இப்போ மீனா சொல்றாங்க  நீங்க எதுக்கு மாமா தேவையில்லாம அலைஞ்சுகிட்டு நானே போய் அத்தைக்கு சாப்பாடு கொடுத்துடறேன் சொல்லிடறாங்க.

விஜயாவும் எனக்கும் பார்வதியும் சேர்த்து எடுத்துட்டு வா அப்படின்னு சொல்றாங்க.. இப்போ மனோஜ் சோரூமுக்கு ஒருத்தர் லெட்டர் கொண்டு  வராரு.. அத மனோஜ் கிட்ட கொடுக்கவும் மனோஜ் அத வாங்கி பயத்தோடே படிக்கிறாரு  உன் அம்மாவுக்கு மாரடைப்பு வரும்.. உன் தம்பி கொலைகாரனா ஆவான் ..  நீ தற்கொலை செஞ்சுக்குவ அப்படின்னு எழுதி இருக்கு இதை பார்த்துட்டு மனோஜ் ரொம்ப பயந்து போய் அதிர்ச்சி ஆயிடுறாரு.. படிச்சிட்டு லெட்டர் கொடுத்தவர தேடி போறாரு அவர்  காணாமல் போய்விடுகிறார். பக்கத்துல உள்ளவங்க கிட்ட விசாரிக்கும் போது அவன் ஒரு லூசு கொஞ்சம் பார்த்து பத்திரமா இருங்க அப்படின்னு சொல்றாங்க .இப்போ மீனா அண்ணாமலைக்கும் ஸ்ருதிக்கும் சாப்பாடு பரிமாறிட்டு இருக்காங்க.

vijaya,meena (2) (1) (1)

ஸ்ருதி சாப்பாடு நல்லா இருக்கு மீனானு பாராட்டுறாங்க.. இப்போ அண்ணாமலை சுருதி மீனாவ புகழ்ந்து பேசுறாரு ..விஜயாவை   இன்னைக்கு வரைக்கும் என்னால புரிஞ்சுக்க முடியல ஆனா நீங்க ரெண்டு பேரும் அவளை புரிஞ்சு வச்சிருக்கீங்க.. இப்ப சுருதி  அண்ணாமலைக்கிட்ட கிட்ட அங்கிள் நான் ஒன்னு சொல்றேன் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க அப்படின்னு சொல்றாங்க ..அண்ணாமலையும்  எதுவா இருந்தாலும் சொல்லுமா அப்படின்றாரு.. இப்போ ஸ்ருதி சொல்றாங்க மீனா இடத்தில நான் இருந்தா கோவத்துல ஆண்ட்டி  கடிச்சு கூட வச்சுருவேன் அங்கிள் அப்படின்னு சொல்றாங்க .உடனே அண்ணாமலை மீனா அப்படி இல்லம்மா இருக்குறது  அவளுக்கு ஒரு நல்லா தோதா போச்சு.. எல்லாமே ஒரு நாள் மாறும்  அப்படின்னு சொல்றாரு.

இப்போ மீனா விஜயாவுக்கு சாப்பாடு எடுத்துகிட்டு போறாங்க போற வழியில ஒரு தாத்தாவும் பாட்டியும் சின்னதா கடை வைத்திருக்கிறார்கள். அந்த தாத்தா அந்த பாட்டியை எழுப்பிறாரு  ..அந்த பாட்டி எந்திரிக்கவே இல்லை. இதைப் பார்த்த மீனா பக்கத்துல வந்து என்ன ஆச்சு அந்த பாட்டிக்கு அப்படின்னு கேட்க பசி மயக்கத்துல எந்திரிக்க மாட்டேங்குறாங்க அப்படின்னு சொல்றாங்க. இப்ப மீனாவும் அவங்கள எழுப்பி உட்கார வைத்து சாப்பாட ரெண்டு பேருக்குமே பரிமாறுறாங்க.. ரெண்டு பேருமே சாப்பிட்டு மீனாவ வாழ்த்துறாங்க. மீனா நைட்டு சாப்பிடுவதற்கும் காசு கொடுத்துட்டு போறாங்க.. இப்போ விஜயா டான்ஸ் கிளாஸ்ல டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க.. அங்கே இரண்டு பேரு லவ்வர்ஸ் இருக்காங்க.. அவங்கள பார்த்த பார்வதி இவங்க பேச்சை சரியில்லையே அப்படின்னு நோட் பண்ணிட்டு இருக்கிறாங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்