அண்ணாமலை இடத்திற்கு 6 நிர்வாகிகள்.! பாஜக தலைமை அறிவிப்பு.!

BJP State President Annamalai

சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ளதால், மாநில கட்சிப் பணிகளை மேற்கொள்ள 6 பேர் கொண்டக் குழுவை கட்சித் தலைமை நியமித்துள்ளது.

பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை, தானது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் (செப்டம்பர், அக்டோபர், நவம்பர்) படிக்க உள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை 3 மாத காலம் அரசியலில் இருந்து இடைவெளி விட்டு இருப்பதால் ,  தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளை கவனிக்க பாஜக தலைமை 6 பேர் கொண்ட கமிட்டியை நியமனம் செய்துள்ளது.

அந்த கமிட்டியின் தலைவராக H.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். M.சக்கரவர்த்தி , P.கனகசபாபதி, M.முருகானந்தம், ராம சீனிவாசன், S.R.சேகர் ஆகியோர் கமிட்டியின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் கட்சி சார்பான முக்கிய முடிவுகளை இந்த 3 மாத காலத்திற்கு மேற்குறிப்பிட்ட கமிட்டி கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உறுப்பினர்கள் தமிழகத்தில் தங்கள் கட்சி பணிகளை மண்டல வாரியாக பிரித்து செயலாற்றுவார்கள் என்றும், ஒவ்வொரு நபருகும் 1 அல்லது 2 மண்டலங்கள் ஒதுக்கப்படும் என்றும் யார் யாருக்கு எந்த மண்டலம் என குழு தலைவர் H.ராஜா முடிவு செய்வார் என கட்சித் தலைமை செயலதிகாரி அருண் சிங் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்